Monday, August 14, 2017

தேடி வந்த மாப்பிள்ளை

1970 ஆகஸ்டில் பந்துலு இயக்கத்தில் வெளிவந்த இப்படம் முற்பகுதி நன்றாக இருந்தாலும் போகப் போக போர் அடிக்கிறது. வழக்கமான மசாலாக்  கதை.

எம்.ஜி.ஆருடைய தந்தையை யாரோ கொலை செய்து விட, அதைச் செய்தவர் மேஜர் சுந்தரராஜன் என எம்.ஜி.ஆர். அம்மா எம்.வி.ராஜம்மா நம்புகிறார். அவரைத் தேடி பட்டணம் வரும் எம்.ஜி.ஆர். அவருடைய மகளான ஜெயலலிதாவைக் காதலிக்கிறார். அவர் குற்றவாளி இல்லை எனத் தெரிந்து கொள்கிறார். இதற்கிடையே ஜெயலலிதாவுக்குத் தொலைந்து போன ஜோதி லட்சுமி அக்காவும், அவருடைய காதலரான சோவும். நடுவிலே அசோகன் புகுந்து குட்டையைக் கிளப்ப வழக்கம் போல கடைசியில் அவர் சிறை செல்ல, முடிவு சுபம்.


சோவுக்கு வாய்ப்பு படத்தில் குறைவு. அவர் தோன்றும் காட்சிகளில் நன்றாக நடித்திருந்தாலும், ஹை லைட்டாக எதுவுமில்லை. அவருடைய கேரக்டர் பெயர் கர்ப்பதன். பின்னாட்களில் கவர்ச்சி நடிகையாகக் கொடி கட்டிப் பறந்த ஜோதி லட்சுமி அவருக்கு ஜோடி. படத்தின் முடிவில் சோ ஒரு சி..டி. இன்ஸ்பெக்டர் என்பதை வெளிப்படுத்துகிறார்.

No comments:

Post a Comment